குண்டர் சட்டத்தில் சாராய வியாபாரி கைது :

By செய்திப்பிரிவு

சாராய வியாபாரி குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த சாத்கர் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த் (34). இவர், பேரணாம்பட்டு பகுதியில் சாராய விற்பனையில் ஈடுபட்டிருந்தபோது பேரணாம்பட்டு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

பிரசாந்த் தொடர்ந்து சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதால் அவர் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தை பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், ஆட்சியர் குமாரவேல் பாண்டியனுக்கு பரிந்துரை செய்தார்.

ஆட்சியர் உத்தரவின் பேரில் பேரணாம்பட்டு காவல் துறையினர் பிரசாந்த் மீது குண்டர் தடுப்புச்சட்டம் பதிவு செய்யப்பட்டு அதற்கான உத்தரவு நகல் வேலூர் மத்திய சிறைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 secs ago

கருத்துப் பேழை

22 mins ago

விளையாட்டு

26 mins ago

இந்தியா

30 mins ago

உலகம்

37 mins ago

சினிமா

1 hour ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்