தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியை சேர்ந்த கண்ணன்(33)என்பவர், ஆந்திர மாநிலம் சந்திரகுண்டா பகுதியில் இருந்து லாரியில் 16 எருமைகள் ஏற்றிக்கொண்டு கேரள மாநிலம் சென்றுள்ளார். அதில் ஒரு எருமை வழியில் இறந்துள்ளது. 15 எருமைகளை சந்தையில் விற்றுவிட்டு, இறந்த எருமையின் சடலத்தை பொள்ளாச்சி அடுத்த திப்பம்பட்டி பகுதிக்கு கொண்டு வந்து நீர்நிலையில் வீச முயன்றுள்ளனர். லாரியில் இருந்து துர்நாற்றம் வீசியதை கண்ட அப்பகுதி மக்கள் லாரியை சிறைபிடித்தனர். லாரியை சோதனையிட்ட போது, எருமையின் சடலம் கிடப்பது தெரியவந்தது. தகவலின்பேரில், கோமங்கலம் போலீஸார் வந்து விசாரித்தனர். இதையடுத்து, கஞ்சம்பட்டி ஊராட்சி நிர்வாகம் சார்பில், லாரி ஓட்டுநர் கண்ணனுக்கு ரூ.20,000 அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர் லாரியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு எருமையை குழிதோண்டிப் புதைக்குமாறு போலீஸார் அறிவுறுத்தினர்.
முக்கிய செய்திகள்
சினிமா
12 mins ago
இணைப்பிதழ்கள்
5 hours ago
தமிழகம்
6 mins ago
சினிமா
17 mins ago
சினிமா
20 mins ago
வலைஞர் பக்கம்
24 mins ago
சினிமா
29 mins ago
சினிமா
34 mins ago
இந்தியா
42 mins ago
க்ரைம்
39 mins ago
இந்தியா
45 mins ago
தமிழகம்
1 hour ago