மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்ட அறிக்கை: தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்துக்கு பல்கலைக்கழக மானியக் குழுவின் 12-வது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியே 22 லட்சத்து 82 ஆயிரத்து 172 தொகை வர வேண்டியிருந்தது. பல்கலைக்கழகம் கடும் நிதிச் சுமைக்குள்ளானதால் இத்தொகையை பெற்றுத்தர கல்வித்துறை நிலைக்குழு உறுப்பினர் என்ற முறையில் உதவுமாறு பல்கலைக்கழகத் தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து பல்கலைக்கழகத்துக்கு வழங்க வேண்டிய தொகையை விரைந்து வழங்குமாறு மானியக் குழுவின் செயலாளருக்கு கடிதம் எழுதி தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். எனது கோரிக்கையை ஏற்று ரூ.3 கோடியே 22 லட்சத்து 82 ஆயிரத்து 172-ஐ தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு வழங்கி மானியக்குழு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
சினிமா
29 mins ago
தமிழகம்
33 mins ago
தமிழகம்
36 mins ago
சுற்றுலா
48 mins ago
தமிழகம்
50 mins ago
சினிமா
55 mins ago
கருத்துப் பேழை
1 hour ago
இந்தியா
58 mins ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
16 mins ago