வில்லியனூருக்கு புதிய துணை ஆட்சியர் நியமனம் : 18 துணை தாசில்தார்களுக்கு பதவி உயர்வு

By செய்திப்பிரிவு

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் துணை ஆட்சியராக (வருவாய் -தெற்கு) ஐஏஎஸ் அதிகாரியான ரிஷிதா குப்தா நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் மற்றொரு ஐஏஎஸ் அதிகாரியான கிரிசங்கர் புதுச்சேரி மாவட்ட ஆட்சியருடன் மாவட்ட பயிற்சி பணிக்காக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான ஆளுநரின் உத்தரவை தலைமை செயலர் அஸ்வனிகுமார் நேற்று பிறப்பித்துள்ளார்.

5 தாசில்தார்கள் இடமாற்றம்

புதுச்சேரி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் கீழ் பணிபுரியும் 5 தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, காரைக்கால் தாலுகா அலுவலக தாசில்தார் பொய்யாத மூர்த்தி திருநள்ளாறு தாலுகா அலுவலகத்துக்கும், புதுச்சேரி மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய தாசில்தார் கார்த்திகேயன் வில்லியனூர் தாலுகா அலுவலகத்துக்கும், வில்லியனூர் தாலுகா அலுவலக தாசில்தார் அருண்அய்யாவு துணை ஆட்சியர் (கலால்) அலுவலகத்துக்கும், நிலஅளவு பதிவேடுகள் துறை தாசில்தார் செந்தில்குமார் சிறப்பு செயலர் (வருவாய்) அலுவலகத்துக்கும், வில்லியனூர் துணை ஆட்சியர் (வருவாய்-தெற்கு)சரவணன்துணை ஆட்சியர் (கலால்) அலுவலகத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

இதில், காரைக்கால் எடை அளவை துறை உதவி கட்டுப்பாட்டாளர் அலுவலக தாசில்தார் முத்துவுக்கு காரைக்கால் மாவட்ட ஆணைய கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

18 துணை தாசில்தாருக்கு பதவி உயர்வு

இதேபோல் புதுச்சேரியில் 18 துணை தாசில்தார்களுக்கு அடாக் முறையில் தாசில்தாராக பதவி உயர்வு அளித்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை வருவாய்த்துறை சிறப்பு செயலர் பூர்வா கார்க் பிறப்பித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

25 secs ago

சினிமா

10 mins ago

தமிழகம்

26 mins ago

கருத்துப் பேழை

34 mins ago

இந்தியா

40 mins ago

விளையாட்டு

15 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

46 mins ago

மேலும்