தீயில் கருகி இளம்பெண் உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: வந்தவாசி அருகே தீயில் கருகி பெண் உயிரிழந்தது தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த நல்லூர் கிராமத்தில் வசிப்பவர் மோகன். இவரது மனைவி முத்தம்மாள்(21). இவர், வீட்டில் கடந்த 15-ம் தேதி மண்ணெண்ணெய் அடுப்பில் சமையல் செய்துள்ளார். அப்போது மண்ணெண்ணெய் தீர்ந்துபோனதால், கேனில் இருந்த மண்ணெண்ணெயை கொண்டு அடுப்பில் ஊற்ற முயன்றதாகவும், அந்த சமயத்தில் முத்தம்மாளின் சேலையில் தீப்பற்றிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் தீயில் கருகி உயிருக்கு ஆபத்தான நிலையில், சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் உயிரிழந்தார். இது குறித்து அவரது தாய் சுமதி கொடுத்த புகாரின் பேரில் தெள்ளார் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

முத்தம்மாளுக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆவதால், கோட்டாட்சியர் விஜயராஜ் விசாரணை நடத்தி வருகிறார். உயிரிழந்த முத்தம்மாளுக்கு 8 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

9 hours ago

உலகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

வேலை வாய்ப்பு

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

கல்வி

12 hours ago

மேலும்