சாலையில் கிடந்த வெடிபொருளை மிதித்தபோது வெடித்ததால் பெண் படுகாயம் :

By செய்திப்பிரிவு

திருச்சி: திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகேயுள்ள ஊட்டத்தூரில் 3 கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இதற்கு கொண்டு செல்லப்பட்ட வெடிபொருளில் ஒன்று தவறுதலாக சாலையில் விழுந்து கிடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு அதே ஊரைச் சேர்ந்த செந்தில்குமார் மனைவி வசந்தி(35) என்பவர் அவ்வழியாக நடந்து சென்றபோது, எதிர்பாராமல் கீழே கிடந்த வெடிபொருளை மிதித்துள்ளார். அப்போது அந்த வெடிபொருள் வெடித்துச் சிதறியதில் வசந்தியின் காலில் படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர், திருச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதற்கிடையே, வெடிபொருட்களை கவனக்குறைவாக கையாளக்கூடிய கல்குவாரி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாடாலூர் - புள்ளம்பாடி சாலையில் ஊட்டத்தூர் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் வருவாய்த் துறை, காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவம் குறித்து சிறுகனூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

11 mins ago

க்ரைம்

15 mins ago

இந்தியா

13 mins ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

சுற்றுலா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

59 mins ago

தமிழகம்

3 hours ago

மேலும்