இரு தரப்பினர் மோதலில் 4 பேருக்கு வெட்டு :

By செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள சிவலார்குளம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி என்பவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை அடமானம் வைத்து கடன் வாங்கியுள்ளார்.

கடனை சரியாக திருப்பிச் செலுத்தாததால் கருப்பசாமி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந் ததில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே கருப்பசாமி அந்த வீட்டை வேறு ஒருவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.

இந்நிலையில், வீட்டில் வாடகைக்கு குடியிருந்த வர்களிடம் முத்துப்பாண்டி(65) அவரது மகன்கள் கல்யாண சுந்தரம்(25), பெர்லின்(20) ஆகியோர் தகராறு செய்துள்ளனர். இதை அதே ஊரைச் சேர்ந்த தர்மராஜ் மகன் செந்தில்(32) என்பவர் தட்டிக் கேட்டுள்ளார்.

இதனால் இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டு ஒருவருக்கொருவர் அரிவாளால் வெட்டிக் கொண்டனர். இதில் காயமடைந்த 4 பேரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இது தொடர்பாக ஆலங்குளம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

தமிழகம்

28 mins ago

விளையாட்டு

23 mins ago

கல்வி

43 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்