கடலூர்: புவனகிரி வட்டத்திற்கு உட்பட்ட பின்னலூர் பகுதியில் உள்ள வீரநாராயணன் உழவர் உற்பத்தி நிறுவனத்தின் மூலம் செயல்பட்டு வரும் விதை சுத்திகரிப்பு நிலையம் மற்றும் சேமிப்பு கிடங்கினை கடலூர் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியது:
தமிழ்நாடு சிறு விவசாயிகள் வேளாண் வணிக நட்பமைப்பு நிதியுதவி மற்றும் வேளாண் விற்பனை மற்றும் வணித்துறை வழிகாட்டுதலில் படி வீரநாராயணன் உழவர் உற்பத்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் பல்வேறு வட்டாரங்களைச் சேர்ந்த 1,006 சிறு ,குறு விவசாயிகள் பங்குதாரர்களாக உள்ளனர். இந்நிறுவனத்தின் மூலம் இடுபொருட்கள் விற்பனை மையம் மற்றும் பங்குதாரர்களிடமிருந்து நெல் கொள்முதல் மற்றும் நேரடி விற்பனை மற்றும் நெல்,உளுந்து விதை உற்பத்தி நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.
இதை தொடர்ந்து குறிஞ்சிப்பாடி வட்டம் வரதராஜன்பேட்டை பகுதியில் 60 உறுப்பினர்களை கொண்டு இயங்கி வரும் குறிஞ்சிப்பாடி உழவர் உற்பத்தியாளர் குழுவின் செயல்பாடுகள் குறித்து குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களிடம் கேட்டறிந்தார். அனைத்து உறுப்பினர்களும் ஒன்றிணைந்து சிறப்பாக செயல்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும் இக்குழுவின் உறுப்பினர்களுக்கு பேட்டரி மருந்து தெளிப்பான் இயந்திரத்தை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
முக்கிய செய்திகள்
சினிமா
8 mins ago
இணைப்பிதழ்கள்
5 hours ago
தமிழகம்
2 mins ago
சினிமா
13 mins ago
சினிமா
16 mins ago
வலைஞர் பக்கம்
20 mins ago
சினிமா
25 mins ago
சினிமா
30 mins ago
இந்தியா
38 mins ago
க்ரைம்
35 mins ago
இந்தியா
41 mins ago
தமிழகம்
1 hour ago