தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே மான் கொம்பு, வீச்சரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் இளைஞர் கைது செய்யப்பட்டார்.
சாயர்புரம் எஸ்ஐ ராஜேந்திரன் தலைமையில் போலீஸார் நேற்று முன்தினம் போப் கல்லூரி முன்பு வாகன சோதனை செய்தனர். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர்.
அவர் சிவத்தையாபுரம் சாமிகோயில் தெருவைச் சேர்ந்த காளிமுத்து மகன் ஆனந்தசேகர் (38) என்பது தெரியவந்நது. அவரது மோட்டார் சைக்கிளை சோதனை செய்ததில், மான் கொம்பு, கத்தி, மற்றும் வீச்சுரிவாள் ஆகியவை இருந்தது. போலீஸார் அவரைக் கைது செய்து, மான் கொம்பு மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். அவரது வீட்டில் போலீ ஸார் சோதனை நடத்தியதில் 3 பெரிய வீச்சரிவாள், 1 அரிவாள், 3 பெரிய கத்திகள், 3 மான் கொம்புகள் மற்றும் ஷரங்கு எனப்படும் கைப்பிடியுடன் கூடிய பெரிய குத்து கம்பி ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து தகவல் அறிந்த தும் எஸ்பி ஜெயக்குமார், வைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேசன் ஆகியோர் சாயர்புரம் காவல் நிலையம் சென்று பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்களை பார்வையிட்டனர். சாயர்புரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
க்ரைம்
5 hours ago
விளையாட்டு
5 hours ago
இந்தியா
5 hours ago
விளையாட்டு
7 hours ago
தமிழகம்
7 hours ago
சினிமா
7 hours ago
கல்வி
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
சினிமா
8 hours ago
தமிழகம்
9 hours ago