மகளிர் குழுக் கடன்களை ரத்து செய்யக் கோரி மனு :

By செய்திப்பிரிவு

மகளிர் சுயஉதவி குழுக் கடனை ரத்து செய்ய வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்ட விமன்ஸ் இந்தியா மூவ்மென்ட் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.செய்யதுஅலி பாத்திமா உள்ளிட்டோர் அளித்த மனு விவரம்:

கரோனா 2-ம் அலையால் பொது மக்கள் வாழ்வாதாரம் இல்லாமல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மேலப்பாளையத் திலுள்ள பெரும்பாலான பெண்கள் சுயஉதவி குழுக்கள் மூலம் தவணை முறையில் கடன் பெற்றுள்ளனர். தவணை தொகையை 3 மாத தாமதத்தில் செலுத்துமாறு அரசும் தெரிவித்திருக்கிறது. ஆனால், இந்த உத்தரவை மீறி மக்களை கட்டாயப்படுத்தி கடனை வசூல் செய்கிறார்கள். இதனால் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, சுயஉதவிக் குழு கடனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தமிழகம்

38 mins ago

சினிமா

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்