எலச்சிபாளையம் சுகாதார நிலையத்துக்கு கூடுதல் தடுப்பூசி வழங்க கம்யூ. கோரிக்கை :

By செய்திப்பிரிவு

நாமக்கல்: கரோனா தடுப்பூசிகளை எலச்சிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதலாக வழங்க வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் சு.சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் மனு அளித்தனர். மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள விவரம்:

திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையம், கொன்னையார், கோக்கலை, இலுப்புலி, அகரம் உள்ளிட்ட கிராமங்களில் கரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. எனினும், போதுமான தடுப்பூசிகள் மருத்துவமனைக்கு வருவதில்லை. இதனால் நீண்ட தூரம் சென்று தடுப்பூசிகளை போட வேண்டிய நிலை உள்ளது. இப்பகுதி மக்களின் நலன் கருதி எலச்சிபாளையத்தை மையமாக கொண்டு செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இரண்டு வகையான தடுப்பூசிகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என குறிப்பிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

கல்வி

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சுற்றுலா

3 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்