அரியலூர்: அரியலூரை அடுத்த ராயம்புரம் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு செயல்பட்டு வரும் ரேஷன் கடையில், பொதுமக்களுக்கு நேற்று விநியோகம் செய்யப்பட்ட அரிசி தரமானதாக இல்லை என்று கூறி, தரமான அரிசியை வழங்க வலியுறுத்தி ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். தகவலறிந்து வந்த செந்துறை போலீஸார், இதுதொடர்பாக வட்ட வழங்கல் துறை அதிகாரிகளை செல்போனில் தொடர்புகொண்டு பேசினர். பின்னர், அடுத்த மாதத்திலிருந்து தரமான அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்ததையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 mins ago
வாழ்வியல்
16 mins ago
தமிழகம்
32 mins ago
கருத்துப் பேழை
54 mins ago
விளையாட்டு
58 mins ago
இந்தியா
1 hour ago
உலகம்
1 hour ago
சினிமா
2 hours ago
வலைஞர் பக்கம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago