சனிக்கிழமை மீன் கடைகள் செயல்படக்கூடாது என்ற அறிவிப்பை அரசு திரும்ப பெற வேண்டும் என கோவை மாவட்ட சில்லரை மீன் வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து கோவை மாவட்ட சில்லரை மீன் வியாபாரிகள் சங்க துணைத் தலைவர் எம்.ஹெச்.அப்பாஸ், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியி ருப்பதாவது:
தமிழக அரசு கரோனா கட்டுப் பாடுகள் என்ற பெயரில் ஏழைகள், கூலித் தொழிலாளர்கள் மற்றும் அன்றாட தொழில் செய்து வாழ்க்கை நடத்தும் சாமானியர்கள் மீது தொடர்ந்து அறிவிக்கப்படாத போரைத் தொடுத்து வருவது கண்டனத்துக்குரியது.
குறிப்பாக சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் இறைச்சிக் கடைகள், மீன் கடைகள் செயல்படாது என்ற அரசின் அறிவிப்பு, இறைச்சி கடை நடத்துபவர்களுக்கு மட்டுமின்றி, கடைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும், அவர்களை நம்பி குடும்பம் நடத்தும் மக்களுக்கும் பாதிப்பாக அமைகிறது.
ஞாயிற்றுக்கிழமைதான் மீன் வியாபாரம் நன்றாக இருக்கும். ஆனாலும் அரசின் அறிவிப்பு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அதற்கு ஒத்துழைப்பு நல்கிய நிலையில், சனிக்கிழமையும் செயல்படாது என்று அறிவிப்பு வந்துள்ளது அதிர்ச்சியாக உள்ளது.
ஏற்கெனவே கடந்த ஓராண் டுக்கு மேலாக பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் தொழில் செய்து வருபவர்களுக்கும், வேலை செய்து வரும் தொழிலாளர் களுக்கும் இதுபோன்ற தொடர் அறிவிப்புகள் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் உள்ளன.
எனவே, பாதுகாப்பு நெறிமுறைகளை வலுப்படுத்தி, சனிக்கிழமையும் மீன் வியாபாரம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.
முக்கிய செய்திகள்
உலகம்
5 mins ago
இந்தியா
14 mins ago
இந்தியா
8 mins ago
இந்தியா
31 mins ago
விளையாட்டு
49 mins ago
விளையாட்டு
51 mins ago
இந்தியா
45 mins ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
42 mins ago
விளையாட்டு
58 mins ago
இந்தியா
3 hours ago
இந்தியா
1 hour ago