ஈரோடு மாவட்ட சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்குப்பதிவில் ஆண்கள் முதலிடம் :

By செய்திப்பிரிவு

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், பெண் வாக்காளர்களை விட, ஆண் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 19 லட்சத்து 63 ஆயிரத்து 32 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில், 15 லட்சத்து 9 ஆயிரத்து 692 பேர் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்துள்ளனர். அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் ஆண் வாக்காளர்களே அதிக அளவில் வாக்களித்துள்ளது, வாக்குப்பதிவு முடிவுகளில் தெரியவந்துள்ளது.

இதன்படி, 8 தொகுதிகளிலும் மொத்தம் 9 லட்சத்து 56 ஆயிரத்து273 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 7 லட்சத்து 51 ஆயிரத்து766 பேர் தேர்தலில் வாக்களித் துள்ளனர். பெண் வாக்காளர்களைப் பொறுத்தவரை மொத்த முள்ள 10 லட்சத்து 6 ஆயிரத்து 649 பேரில், 7 லட்சத்து 57 ஆயிரத்து 888 வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர். ஆண் வாக்காளர்களில் 78.61 சதவீதமும், பெண் வாக்காளர்களில் 75.29 சதவீதமும், மற்றவர்கள் 34. 55 சதவீத வாக்காளர்களும் தேர்தலில் வாக்குப்பதிவு செய்துள்ளனர்.

மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், வாக்குப்பதிவில் ஆண் வாக்காளர்களே முந்தியுள்ளனர். இதன் மூலம், அனைத்து தொகுதிகளிலும் வெற்றியை நிர்ணயிப்பவர்களாக ஆண் வாக்காளர்கள் மாறி யுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

9 hours ago

உலகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

வேலை வாய்ப்பு

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

கல்வி

11 hours ago

மேலும்