தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் அருகே உள்ள என்.ஜெகவீரபுரத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் காளிதாஸ் (38). இவரது வீட்டுக்குச் சென்ற அதே பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் முருகன், திமுகவுக்கு ஆதரவு கேட்டுள்ளார். அப்போது காளிதாஸ் குடும்பத்தினருக்கும் முருகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் காலை புதூரில் நின்றிருந்த முருகன் தாக்கப்பட்டதாக தெரிகிறது. அவர் அளித்த புகாரின் பேரில் காளிதாஸ், அவரது அண்ணன் சு.முருகன் உட்பட 4 பேர் மீது புதூர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு காளிதாஸ் என்.ஜெகவீரபுரத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிலர் காளிதாஸை தாக்கி, அவருக்கு சொந்தமான இரண்டு வேன்களுக்கு தீ வைத்தனர். காயமடைந்த காளிதாஸ் அருப்புக்கோட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் அளித்த புகாரின்பேரில் காடல்குடி போலீஸார் விசாரணை நடத்தி என்.ஜெகவீரபுரத்தைச் சேர்ந்த அழகுபாண்டி, அன்புராஜ், மாரிச்சாமி, தமிழரசன், சதீஷ்குமார், பாண்டீஸ்வரன், மனோஜ், முருகன் ஆகிய 8 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். அழகுபாண்டி கைது செய்யப்பட்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
46 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago