ஜோலார்பேட்டை அருகே இரு சக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் கார் ஓட்டுநர் உயிரிழந்தார்.
திருப்பத்தூர் டவுன் ஜார்ஜ் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கார் ஓட்டுநர் திருமால் (50). இவர், நேற்று முன்தினம் இரவு தனது இரு சக்கர வாகனத்தில் ஜோலார்பேட்டை ஒன்றியம் கட்டேரி இந்திரா நகர் பகுதி வழியாக சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த சரக்கு வாகனம் இவர் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட திருமால் சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து ஜோலார்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
28 mins ago
விளையாட்டு
51 mins ago
வேலை வாய்ப்பு
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago
கல்வி
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
வாழ்வியல்
2 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago