பெரம்பலூர் அருகே கார் மோதியதில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழப்பு மற்றொரு விபத்தில் தந்தை, மகன் மரணம்

By செய்திப்பிரிவு

பெரம்பலூர் அருகே நேற்று இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூ ரைச் சேர்ந்தவர் பாண்டியன் மனைவி தனம்(50). இவர், தனது மகன் சக்திவேல்(22), மகள் பரமேஸ்வரி(26), பரமேஸ்வரி யின் குழந்தைகள் செந்நிலா(3), தமிழ் நிலவன்(2), மற்றொரு மகள் பச்சையம்மாளின் மகள் நந்திதா(2) ஆகியோருடன் ஒரு இருசக்கர வாகனத்தில் கொளப் பாடியில் உள்ள பச்சையம்மாளின் வீட்டிலிருந்து நேற்று வேப்பூருக்கு புறப்பட்டுள்ளார். இருசக்கர வாக னத்தை சக்திவேல் ஓட்டியுள்ளார்.

இச்சிலிக்குட்டை அருகே சென்றபோது, எதிரே வந்த கார் இருசக்கர வாகனம் மீது மோதி, அருகிலிருந்த சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், பரமேஸ்வரி, செந்நிலா, நந்திதா ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த தனம், சக்திவேல், தமிழ்நிலவன் ஆகியோரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், தனம், சக்திவேல் உயிரிழந்தனர். தமிழ்நிலவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து குன்னம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, கார் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

மற்றொரு விபத்து: கரூர் மாவட்டம் சிந்தாமணிப்பட்டியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன்(30). இவரது மனைவி மலர்விழி(29), மகன் ஹர்ஷன்(1) ஆகியோ ருடன் நேற்று முன்தினம் மாயனூர் செல்லாண்டியம்மன் கோயிலுக்குச் சென்றுவிட்டு மோட்டார்சைக்கிளில் வதியத்தில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார்.

க.பேட்டை பகுதியில் சென்ற போது, எதிரே வந்த தனியார் பேருந்து மோதியதில் கார்த்தி கேயன், ஹர்ஷன் ஆகியோர் உயிரிழந்தனர். காயமடைந்த மலர்விழி சிகிச்சை பெற்று வருகி றார். லாலாபேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

12 mins ago

க்ரைம்

16 mins ago

சுற்றுச்சூழல்

52 mins ago

க்ரைம்

56 mins ago

இந்தியா

54 mins ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

1 hour ago

சுற்றுலா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்