புதுச்சேரி முன்னாள் எம்எல்ஏஜான்குமார் நேற்று செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் நான் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் என்பதால் தான் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட வைத்தனர். அதன் படி நான் தேர்தலில் வெற்றி பெற்றேன். எனக்கு தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை.
காங்கிரஸ் கட்சியில் பதவி வகித்து வந்த நமச்சிவாயம், தீப்பாய்ந்தான் ஆகியோர் ராஜினாமா செய்தபோது முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும்.
அதன்பிறகு அமைச்சர் கந்தசாமி அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்ய லாம் என கூறினார். ஆனால்அதையும் முதல்வர் நாரா யணசாமி செய்யவில்லை. தற்போது அவரால் அரசுக்கு தொடர்ந்து சிக்கல்கள் ஏற்பட்டது.
இதனால் மல்லாடி கிருஷ் ணாராவ், லட்சுமிநாராயணன், திமுக எம்எல்ஏ வெங்கடேசன் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இந்தநிலையில் முதல்வர் நாராயணசாமி தார்மீக பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
18 mins ago
க்ரைம்
22 mins ago
சுற்றுச்சூழல்
58 mins ago
க்ரைம்
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
2 hours ago
கருத்துப் பேழை
2 hours ago
சுற்றுலா
2 hours ago
சினிமா
2 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago