கோவையில் நள்ளிரவில் மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர்.
கோவை பேரூரை அடுத்த ஆலாந்துறை காமாட்சி அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சஞ்சீவிகுமார் (20). தனியார் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்துவந்தார். இவரது உறவினர் மகன் அனந்தராமன் (17). ஆலாந்துறையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.
இருவரும் நேற்றுமுன்தினம் நள்ளிரவில் கோவை-சிறுவாணி சாலையில், பேரூரில் உள்ள சிவசக்தி திருமண மண்டபம் அருகே காரில் சென்றபோது சாலையின் இடதுபக்கம் உள்ள மரத்தில் கார் வேகமாக மோதியது. இதில் காரில் இருந்த சஞ்சீவிகுமார், அனந்தராமன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
காரின் ஒருபகுதி முற்றிலும் உருக்குலைந்தது. காருக்குள் சிக்கிய இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சஞ்சீவிகுமாரும், அனந்தராமனும் நேற்று காலை உயிரிழந்தனர். விபத்து குறித்து பேரூர் போலீஸார் விசாரணை நடத்தினர்.
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
26 mins ago
க்ரைம்
30 mins ago
இந்தியா
28 mins ago
சினிமா
1 hour ago
கருத்துப் பேழை
1 hour ago
சுற்றுலா
2 hours ago
சினிமா
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
ஓடிடி களம்
1 hour ago
தமிழகம்
3 hours ago