யூ-டியூப் சேனல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆபாச வீடியோக்களை வெளியிட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் எச்சரித்துள்ளார்.
யூ-டியூப் சேனல்களை நடத்தி வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிக நபர்களை கவரும்வகையில் சில யூ-டியூப் சேனல்கள் எல்லை மீறி செயல்படுவதாகவும், ஆபாச வீடியோ மற்றும் பேட்டிகளை அதில் பதிவேற்றம் செய்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் யூ-டியூப் சேனல் ஒன்று அண்மையில் பெண்களை ஆபாசமாக பேட்டி எடுத்து அதை வெளியிட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட யூ-டியூப் சேனல் உரிமையாளர், தொகுப்பாளர், கேமராமேன் ஆகிய 3 பேரை சாஸ்திரி நகர் காவல் நிலைய போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
அதன்படி, பொது மக்களை கவரும் வகையில் பேட்டி எடுத்து யூ-டியூப் சேனல் அல்லது சமூக வலை தளங்களில் வெளியிடுகிறோம் என்ற பெயரில் கலாச்சார சீரழிவில் ஈடுபட்டால் அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும்.
உன்னிப்பாக கண்காணிப்பு
முக்கிய செய்திகள்
விளையாட்டு
21 mins ago
க்ரைம்
25 mins ago
சுற்றுச்சூழல்
1 hour ago
க்ரைம்
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
2 hours ago
கருத்துப் பேழை
2 hours ago
சுற்றுலா
2 hours ago
சினிமா
2 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago