20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கூட்டமைப்பு தலைவர் பொன்முடி தலைமை வகித்தார். பொருளாளர் மாணிக்கம், துணைத் தலைவர்கள் சிவராமன், சீத்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் ராஜசேகர் வரவேற்றார். இதில், கூட்டமைப்பின் மாநில துணைச் செயலாளர் பி.வாசு ஆர்ப் பாட்டத்தை தொடங்கி வைத்தார். தகுதியான அனைவருக்கும் விடு பட்டு போன கரோனா நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து முழக்கமிட்டனர்.
இதில், நிர்வாகிகள் துரை, கோட் டீஸ்வரன், பாக்கியராஜ், அகிலா, கிரிஜா, ராணி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார். பின்னர், ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இந்தியா
21 mins ago
தமிழகம்
6 mins ago
வாழ்வியல்
30 mins ago
தமிழகம்
46 mins ago
ஆன்மிகம்
4 mins ago
கருத்துப் பேழை
1 hour ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
1 hour ago
உலகம்
1 hour ago
சினிமா
2 hours ago
வலைஞர் பக்கம்
2 hours ago
தமிழகம்
2 hours ago