நாடு முழுவதும் ஒரே நாளில் புதிதாக 26,115 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் நேற்று காலை 9 மணி வரையிலான கடந்த 24 மணி நேர நிலவரப்படி புதிதாக 26,115 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தபாதிப்பு 3,35,04,534 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் ஒரே நாளில் 252 பேர் கரோனாவால் உயிரிழந்தனர். இதன்மூலம் கரோனா தொற்றால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,45,385 ஆக உயர்ந்துள்ளது.
கரோனா பாதிப்பில் இருந்துகுணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,27,49,574 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 34,469 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடுதிரும்பி உள்ளனர். கரோனாபாதிப்பால் நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 3,09,575 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை55 கோடிக்கும் மேற்பட்டோரின்மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள் ளன. நாடு முழுவதும் நேற்று முன்தினம் வரை மக்களுக்கு 81,85,13,827 கரோனா தடுப்பூசி டோஸ்கள்போடப்பட்டுள்ளது. இத்தகவல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
இந்தியா
4 hours ago
விளையாட்டு
6 hours ago
சினிமா
6 hours ago
சுற்றுச்சூழல்
6 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
10 hours ago
வலைஞர் பக்கம்
10 hours ago
இந்தியா
10 hours ago
தமிழகம்
11 hours ago
இந்தியா
11 hours ago
தமிழகம்
12 hours ago