நாடு முழுவதும் புதிதாக 26,115 பேருக்கு கரோனா பாதிப்பு :

By செய்திப்பிரிவு

நாடு முழுவதும் ஒரே நாளில் புதிதாக 26,115 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று காலை 9 மணி வரையிலான கடந்த 24 மணி நேர நிலவரப்படி புதிதாக 26,115 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தபாதிப்பு 3,35,04,534 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் ஒரே நாளில் 252 பேர் கரோனாவால் உயிரிழந்தனர். இதன்மூலம் கரோனா தொற்றால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,45,385 ஆக உயர்ந்துள்ளது.

கரோனா பாதிப்பில் இருந்துகுணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,27,49,574 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 34,469 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடுதிரும்பி உள்ளனர். கரோனாபாதிப்பால் நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 3,09,575 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை55 கோடிக்கும் மேற்பட்டோரின்மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள் ளன. நாடு முழுவதும் நேற்று முன்தினம் வரை மக்களுக்கு 81,85,13,827 கரோனா தடுப்பூசி டோஸ்கள்போடப்பட்டுள்ளது. இத்தகவல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

6 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

10 hours ago

வலைஞர் பக்கம்

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்