கரோனா விவகாரத்தில் பிரதமரை விமர்சித்து போஸ்டர்கள் ஒட்டிய 15 பேர் டெல்லியில் கைது :

By செய்திப்பிரிவு

புதுடெல்லி; கரோனா பரவல் விவகாரத்தில் பிரதமர் மோடியை விமர்சித்து போஸ்டர்கள் ஒட்டியதாக கூறி டெல்லியில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லியின் பல்வேறு பகுதிகளில் கடந்த வியாழக்கிழமை அன்று பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதில், “மோடி அவர்களே! நமது குழந்தைகளின் கரோனா தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏன் அனுப்புகிறீர்கள்?” என இந்தி மொழியிலான வாசகம் அச்சிடப்பட்டிருந்தது. தகவலறிந்த போலீஸார், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் டெல்லி முழுவதம் 15 பேரை போலீஸார் கைது செய்தனர். 17 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள பலரை தேடி வருவதாகவும் காவல் துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 mins ago

இந்தியா

15 mins ago

இந்தியா

28 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

க்ரைம்

10 hours ago

உலகம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

வேலை வாய்ப்பு

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்