மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் : தம்பி கரோனா தொற்றுக்கு மரணம் :

By செய்திப்பிரிவு

கொல்கத்தா; மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் தம்பி, கடந்த ஒரு மாதமாக கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடி வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று மரணம் அடைந்தார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் தம்பி அஸிம் பானர்ஜி (62). இவர் முதல்வர் மம்தா வசித்த வீட்டிலேயே தங்கியிருந்தார். இவருக்கு கடந்த மாதம் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அஸிம் பானர்ஜி, சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் மரணம் அடைந்தார். இதனை மருத்துவமனையின் தலைவர் டாக்டர் அலோக் ராய் அறிவித்தார்.

மருத்துவமனையின் மூத்த மருத்துவர் ஒருவர் கூறும்போது, "அஸிம் பானர்ஜி காலை 9.20 மணிக்கு உயிரிழந்தார். கடந்த மாதம் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட அவர், ஒரு மாதமாக இங்கு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்தன” என்றார்.

அஸிம் பானர்ஜியின் இறுதிச் சடங்குகள் கரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு நேற்று நடைபெற்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

26 mins ago

க்ரைம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

6 hours ago

கல்வி

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

சினிமா

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்