பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்புமின் மோட்டார் சைக்கிளில் பயணித்த மம்தா

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, நேற்று மின்சார மோட்டார் சைக்கிளில் பயணித்து சட்டப்பேரவைக்கு வந்தார். மாநில அமைச்சர் ஃபிர்காத் ஹக்கீமின் மோட்டார் சைக்கிளை ஓட்ட, அதன் பின்னால் அமர்ந்து கொண்டு மம்தா பானர்ஜி வந்தார்.

சட்டப்பேரவைக்கு வந்த பிறகு அங்கிருந்த செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, "பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவின் விலை உயர்வைக் கண்டித்து நாங்கள் போராட்டம் நடத்தி வருகிறோம். இதன் ஒரு பகுதியாகவே, காருக்கு பதிலாக மின்சார மோட்டார் சைக்கிளில் பயணித்து சட்டப்பேரவைக்கு நான் வந்திருக்கிறேன். பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிவாயு பொருட்களின் விலையை குறைக்க மோடி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த விலை உயர்வை கண்டித்து, நாளை முதல் (இன்று) மாநிலம் முழுவதும் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்படும்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

46 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

வணிகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்