மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீரை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின், “குறுவை சாகுபடி பரப்பை ஆண்டு தோறும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
மேட்டூர் அணையில் இருந்து நேற்று டெல்டா பாசனத்துக்காக தண்ணீரை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து பேசியதாவது:
டெல்டா பாசனத்துக்காக உரிய காலமான ஜூன் 12-ம் தேதியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 18-வது முறையாக உரிய காலத்தில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திருச்சி, தஞ்சாவூர், திரு வாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 5.21 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். பாசனத்துக்கு அணையில் இருந்து ஜூன் 12-ம் தேதி நீர் திறப்பதில் அரசு உறுதி யாக இருக்கும்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது, திமுக ஆட்சி அமையும்போது, 7 முக்கிய அம்சங்களை இலக்காகக் கொண்டு அரசு செயல்படும் என உறுதி அளித்தோம். குறிப்பாக, மேலாண்மை நீர்வளம், விவசாய மகசூல் பெருக்கம், மக்களுக்கு குறையாத குடிநீர், உயர் தரமான கல்வி, உயர் தரமான மருத்துவம் உள்ளிட்ட 7 இலக்குகளை 10 ஆண்டுகளில் அடைவோம் என்று அறிவித்து, இப்போது அதன்படி செயல்பட்டு வருகிறோம்.
தமிழகத்தில் 60 சதவீதமாக உள்ள விவசாய பரப்பை 75 சதவீதமாக அதிகரிக்கும் வகையில் 10 ஆண்டுகளில் திட்டம் செயல்படுத் தப்படும். டெல்டாவில் குறுவை சாகு படி பரப்பை ஒவ்வொரு ஆண்டும் அதிகரிப்பதை இலக்காகக் கொண்டு செயல்படுவோம். கடைமடை வரை நீர் சென்று சேரவும், அதைக் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அதன்படி நேற்று (11-ம் தேதி) டெல்டா பகுதிகளில் தூர்வாரும் பணியை பார்வையிட்டு, பணிகளை போர்க்கால அடிப்படையில் செய்ய உத்தரவிடப்பட்டது.
தூர்வாரும் பணிகள் கரூரில் 10, அரியலூரில் 33, தஞ்சாவூரில் 185, திருவாரூரில் 174, நாகையில் 89, மயிலாடுதுறையில் 26, கடலூரில் 58, புதுக்கோட்டையில் 9 என 9 மாவட்டங்களில் மொத்தம் 647 பணிகள் நடைபெற்று வருகின்றன.
ரூ.65.10 கோடி மதிப்பில் 461 கி.மீ நீளம் தூர் வாரப்படும். இப்பணிகள் உழவர்களை கலந்தாலோசித்தும், சிறப்பு அலுவலர்களைக் கொண்டு கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது. விவசாயத்துக்கான இடுபொருட்கள் இருப்பு வைக்கப் பட்டுள்ளன.
குறுவை சாகுபடி பணிக்கான அனைத்து உதவிகளும் வேளாண் துறை, கூட்டுறவுத் துறை உள்ளிட் டவை மூலம் வழங்கப்படும். இலக்கைக் கடந்து சாகுபடி இருக்கும். உணவு உற்பத்தியில் தமிழகம் சாதனை படைக்கும். இவ்வாறு முதல்வர் பேசினார்.
நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, செந் தில் பாலாஜி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அரசு கொறடா கோ.வி.செழியன், சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், எம்பிக்கள் பார்த்திபன், செந்தில்குமார், எம்எல்ஏக்கள் உதயநிதி ஸ்டாலின், ராஜேந்திரன், சதாசிவம், கூடுதல் செயலர் சந்தீப் சக்சேனா, நீர்வளத் துறையின் திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, முன்னாள் அமைச்சர் செல்வ கணபதி கலந்து கொண்டனர்.
ஊரடங்கில் அலட்சியம் கூடாது
பின்னர் செய்தியாளர்களிடம் முதல்வர் கூறியது: கடந்த ஆட்சி யில் குடிமராமத்துத் திட்டத்தில் எவ்வளவு தூர்வாரப்பட்டது, எங்கெல்லாம் தூர்வாரப்பட்டது உள்ளிட்ட விவரங்கள் தொடர்பாக (அமைச்சர்) துரைமுருகன் சட்டப் பேரவையில் பலமுறை கேள்வி எழுப்பினார். வெள்ளை அறிக்கை வெளியிட பலமுறை கேட்டும் பதில் இல்லை. இப்போதுதான் நாங்கள் ஆட்சிக்கு வந்துள்ளோம். குடிமரா மத்துப் பணிகள் தொடர்பான விவ ரங்களை சேகரித்து வெளியிடு வோம்.தமிழகத்தில் கரோனா கட்டுக்குள் வந்துள்ளது. நான் ஆட்சிப் பொறுப்பேற்கும்போது, தினசரி தொற்று பாதிப்பு 36 ஆயிரமாக இருந்தது. உரிய நடவடிக்கை எடுத்து, முழு ஊரடங்கைக் கொண்டு வந்தோம். தொற்று பாதிப்பு எண் ணிக்கை தற்போது 16 ஆயிரத்துக் கும் கீழே வந்துள்ளது. சென்னை யில் 7 ஆயிரமாக இருந்த தொற்று பாதிப்பு தற்போது ஆயிரமாக வும், கோவையில் 5 ஆயிரமாக இருந்தது, தற்போது 2 ஆயிரத்துக்கு கீழேயும், சேலத்தில் 1,500-ல் இருந்து 900 ஆகவும் குறைந்துள்ளது.
மருத்துவமனைகளில் படுக்கை கள், ஆக்சிஜன் தட்டுப்பாடு இருந் தது. இப்போது, தட்டுப்பாடு என்ற சூழல் இல்லை. சென்னையில் வார் ரூம் திறக்கப்பட்டபோது, மே 20-ம் தேதி 4 ஆயிரத்து 768 அழைப்புகள் வந்தன. இப்போது 200 முதல் 300 அழைப்புகளே வருகின்றன.
தடுப்பூசியை அதிகமாக வழங் கிட ஒன்றிய அரசை வலியுறுத்தி இருக்கிறோம். ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்துள்ளோம். இதை மக்கள் அலட்சியமாக பயன் படுத்தக் கூடாது. அவசியம் இன்றி மக்கள் வெளியில் நடமாடக் கூடாது. மக்களிடம் கெஞ்சி கேட்டுக் கொள் கிறேன். ஊரடங்கு தளர்வுகளின் அடிப்படையில் டாஸ்மாக் மதுக் கடைகள் திறக்கப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 mins ago
வேலை வாய்ப்பு
14 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
கல்வி
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
வாழ்வியல்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago