மதுரை, சேலம், நெல்லை மாநகராட்சி ஆணையர்கள் உட்பட - 25 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் :

By செய்திப்பிரிவு

மாநகராட்சிகளின் ஆணையர்கள் உட்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தலைமைச் செயலர் வெ.இறையன்பு வெளியிட்ட அறிவிப்பு:

தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக செயல் இயக்குநர் கே.பி.கார்த்திகேயன், மதுரை மாநகராட்சி ஆணையராகவும், பொதுத் துறைதுணைச் செயலர் டி.கிறிஸ்துராஜ், சேலம் மாநகராட்சி ஆணையராகவும், பழனி தண்டாயுதபாணி கோயில் செயல் அலுவலர் கிராந்திகுமார் பட்டி, திருப்பூர் மாநகராட்சி ஆணையராகவும், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் செயல் அலுவலர் விஷ்ணு சந்திரன்,நெல்லை மாநகராட்சி ஆணையராகவும், சென்னை மாநகராட்சி மண்டல துணை ஆணையர் (தெற்கு)ராஜ கோபால் சுங்கரா, கோவை மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாகப்பட்டினம் கூடுதல் ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த், சென்னை மாநகராட்சி பணிகள் பிரிவு துணை ஆணையராகவும், வணிக வரிகள் இணை ஆணையர் நர்னவார் மணிஷ் ஷங்கர் ராவ், சென்னை மாநகராட்சி சுகாதாரப் பிரிவு துணை ஆணையராகவும், பெரியகுளம் சார் ஆட்சியர் டி.சினேகா, சென்னை மாநகராட்சி கல்விப் பிரிவு துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தாராபுரம் சார் ஆட்சியர் பவன்குமார் ஜி கிரியப்பனவர், கடலூர் கூடுதல் ஆட்சியராகவும், குன்னூர் உதவி ஆட்சியர் ரஞ்ஜித்சிங், கடலூர் வருவாய்ப் பிரிவு கூடுதல் ஆட்சியராகவும், ஈரோடு வணிகவரி இணைஆணையர் எஸ்.சரவணன், ஊரகவளர்ச்சித் துறை கூடுதல் இயக்குநராகவும், கள்ளக்குறிச்சி சார்ஆட்சியர் எச்.எஸ்.காந்த், தஞ்சாவூர் கூடுதல் ஆட்சியராகவும், பொள்ளாச்சி சார் ஆட்சியர் ஆர்.வைத்திநாதன், தருமபுரி கூடுதல் ஆட்சியராகவும், தருமபுரிசார் ஆட்சியர் எம்.பிரதாப், திருவண்ணாமலை கூடுதல் ஆட்சியராகவும், சிவகாசி சார் ஆட்சியர் சி.தினேஷ்குமார், திண்டுக்கல் கூடுதல் ஆட்சியராகவும், மேட்டூர் சார் ஆட்சியர் வி.சரவணன், தூத்துக்குடி கூடுதல் ஆட்சியராகவும், திண்டிவனம் சார் ஆட்சியர் எஸ்.அனு, பொதுத் துறை (மரபு)துணைச் செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குளித்தலை சார் ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், சேலம் கூடுதல் ஆட்சியராகவும், சேரன்மாதேவி சார் ஆட்சியர் பிரதிக் தயாள், ஈரோடு கூடுதல் ஆட்சியராகவும், விருதாச்சலம் சார் ஆட்சியர் கே.கே.பிரவீன்குமார், ராமநாதபுரம் கூடுதல் ஆட்சியராகவும், ராமநாதபுரம் சார் ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா, தஞ்சாவூர் கூடுதல் ஆட்சியராகவும், ராணிப்பேட்டை சார் ஆட்சியர் கே.எலம்பகவத், குடிசை மாற்றுவாரிய இணை மேலாண் இயக்குநராகவும், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் கலோன், சென்னை மாநகராட்சி தெற்கு மண்டல துணை ஆணையராகவும், திருப்பத்தூர் சார் ஆட்சியர் வந்தனாகார்க், டிட்கோ செயல் இயக்குநராகவும், பெரம்பலூர் சார் ஆட்சியர்ஜே.இ.பத்மஜா, சேலம் சேகோசர்வ்மேலாண் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

31 mins ago

க்ரைம்

35 mins ago

இந்தியா

33 mins ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

சுற்றுலா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

மேலும்