மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளர் கமீலா நாசர், அக்கட்சியில் இருந்து விலகினார்.
இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் (தலைமை அலுவலகம்) சந்தோஷ்பாபு நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநிலச் செயலாளராக (சென்னை மண்டலம் கட்டமைப்பு) இருந்தவர் கமீலா நாசர். தனிப்பட்ட காரணங்களால் தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஏப் ரல் 20-ம் தேதி முதல் அவர் கட்சியின் அனைத்து விதமான பொறுப்புகளில் இருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விடுவிக்கப்படுகிறார்’ என்று தெரிவித்துள்ளார்.
மத்திய சென்னையில் போட்டி
நடிகர் நாசரின் மனைவியான கமீலா நாசர், மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கப்பட்டதில் இருந்தே அக்கட்சியில் செயல்பட்டு வந்தார். 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இத்தேர்தலில் அவர் 11.74 சதவீத வாக்குகளைப் பெற்று தோல்வி அடைந்தார்.தற்போது நடந்த முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்த அவர், தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.
குடும்பத்தை கவனிக்க...
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
11 mins ago
க்ரைம்
15 mins ago
இந்தியா
13 mins ago
சினிமா
1 hour ago
கருத்துப் பேழை
1 hour ago
சுற்றுலா
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
ஓடிடி களம்
59 mins ago
தமிழகம்
3 hours ago