சென்னையில் பாதிப்பு தொடர்ந்து குறைவு - புதிதாக 33,075 பேருக்கு தொற்று : முதியவர்கள் உட்பட 335 பேர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் புதிதாக 33,075 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. முதியவர்கள் உட்பட 335 பேர் உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 18,719, பெண்கள் 14,356 எனமொத்தம் 33,075 பேர் கரோனாவைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 6,150, செங்கல்பட்டில் 2,154, கோவையில் 3,264, திருவள்ளூரில் 1,829, காஞ்சிபுரத்தில் 1,241, மதுரையில் 1,288 பேருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 16 லட்சத்து 31,291 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் 48,156 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 2 லட்சத்து31,596 பேர் சிகிச்சையில் உள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நடுத்தர வயதினர்,முதியவர்கள் உட்பட 335 பேர்உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் 86 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18,005 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 4 லட்சத்து 44,371, செங்கல்பட்டில் 1 லட்சத்து 15,595, கோவையில் 1 லட்சத்து 18,804, திருவள்ளூரில் 82,735, சேலத்தில் 52,442, காஞ்சிபுரத்தில் 51,848 என்ற எண்ணிக்கையில் பாதிப்பு நிலவரம் உள்ளது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

30 mins ago

தமிழகம்

50 mins ago

இந்தியா

6 mins ago

தமிழகம்

1 hour ago

உலகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வலைஞர் பக்கம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

உலகம்

3 hours ago

மேலும்