தமிழகத்தில் 14, 15, 16-ம் தேதிகளில்பெரும்பாலான மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர்நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக 13-ம் தேதி மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதி, தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஓரிருஇடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக் கூடும். நீலகிரி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஓரிருஇடங்களில் இடி, மின்னலுடன் கன மழையும் பெய்யக்கூடும்.
14-ம் தேதி நீலகிரி, கோவை, தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், 15, 16-ம்தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், காற்றுடன் கன முதல் மிக கன மழையும், ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
காற்றழுத்த தாழ்வுப் பகுதி
14-ம் தேதி தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டிய லட்சத்தீவு, மாலத்தீவு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது 15, 16 தேதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாகவும் அதைதொடர்ந்து வட மேற்கு திசையில் நகர்ந்து புயலாகவும் வலுபெறக்கூடும். இதன்காரணமாக குமரிக்கடல் பகுதி,லட்சத்தீவு, மாலத்தீவு, தென்மேற்கு அரபிக்கடல் தென் கிழக்குஅரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிகாற்று மணிக்கு 50 கிமீ வேகத்தில்வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்.இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
15 mins ago
தமிழகம்
23 mins ago
வாழ்வியல்
29 mins ago
தமிழகம்
53 mins ago
இந்தியா
59 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
விளையாட்டு
1 hour ago
வணிகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
சினிமா
2 hours ago