தமிழகத்தில் புதியதாக - 3,645 பேருக்கு கரோனா பாதிப்பு : ஒரே நாளில் 15 பேர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் நேற்று புதியதாக 3,645 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது:

தமிழகத்தில் நேற்று புதியதாக 3,645 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில்,ஆண்கள் 2,176 பேர், பெண்கள் 1,469 பேர். அதிகபட்சமாக சென்னையில் 1,303 பேருக்கு வைரஸ்தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 9 லட்சத்து 7 ஆயிரத்து 124 ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நேற்று மட்டும் 15 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 804 ஆகஉயர்ந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து சில கட்டுப்பாடுகளை கொண்டுவர அரசு ஆலோசித்து வருகிறது.

சகாயத்துக்கு கரோனா தொற்று

இதற்கிடையே, ஐஏஎஸ் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றசகாயம், சட்டப்பேரவை தேர்தலில்சகாயம் அரசியல் பேரவை, தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில்போட்டியிடும் வேட்பாளர்களைஆதரித்து தமிழகத்தின் பல்வேறுஇடங்களில் தேர்தல் பிரச்சாரம்மேற்கொண்டார். இந்நிலையில், அவருக்கு காய்ச்சல், சளி போன்றபாதிப்புகள் இருந்ததை தொடர்ந்துபரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தற்போது, அவருக்கு கரோனா உறுதியாகியுள்ள நிலையில், அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலை சீராக இருக்கிறது. விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

57 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்