தமிழகத்தில் நேற்று புதியதாக 3,645 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது:
தமிழகத்தில் நேற்று புதியதாக 3,645 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில்,ஆண்கள் 2,176 பேர், பெண்கள் 1,469 பேர். அதிகபட்சமாக சென்னையில் 1,303 பேருக்கு வைரஸ்தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 9 லட்சத்து 7 ஆயிரத்து 124 ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நேற்று மட்டும் 15 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 804 ஆகஉயர்ந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து சில கட்டுப்பாடுகளை கொண்டுவர அரசு ஆலோசித்து வருகிறது.
சகாயத்துக்கு கரோனா தொற்று
தற்போது, அவருக்கு கரோனா உறுதியாகியுள்ள நிலையில், அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலை சீராக இருக்கிறது. விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
27 mins ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
57 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago