தேர்தலை முன்னிட்டு கட்டுப்பாட்டு அறைக்கு வந்த புகாரின்பேரில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.100 கோடி ரொக்கம், தங்க நகைகள் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித் துறை அதிகாரிகள் தெரி வித்தனர்.
இதுதொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
300-க்கும் மேற்பட்ட புகார்கள்
தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி, சட்டவிரோதமாக பணம், பொருட்கள் விநியோகம் செய்வதை தடுப்பதற்காக, 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறை கடந்த மார்ச் 1-ம் தேதி திறக்கப்பட்டது. இதில், சென்னை உட்பட தமிழகம் முழுவதிலும் இருந்து 300-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்தன. அவற்றில் நம்பத்தகுந்த புகார்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு, சோதனை நடத்தப்பட்டது. அதில் ரூ.77 கோடி ரொக்கம், ரூ.23 கோடி மதிப்பிலான தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இது கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலைவிட ரூ.65 கோடியும், 2019 மக்களவை தேர்தலைவிட ரூ.19 கோடியும் அதிகம். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
20 mins ago
விளையாட்டு
46 mins ago
க்ரைம்
50 mins ago
சுற்றுச்சூழல்
1 hour ago
க்ரைம்
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
2 hours ago
கருத்துப் பேழை
2 hours ago
சுற்றுலா
3 hours ago
சினிமா
3 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
3 hours ago