அதிமுக தலைமை அலுவலகத்தில் பிப்.24-ம் தேதி ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டம்

By செய்திப்பிரிவு

மறைந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாள் விழா வரும் 24-ம் தேதிசென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்படுகிறது.

இதுகுறித்து அதிமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அதிமுக நிரந்தர பொதுச் செயலாளராகவும், தமிழ்நாடு முதல்வராகவும் அரும்பணியாற்றிய ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாள் வரும் 24-ம் தேதி சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக வளாகத்தில் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, அங்கு அமைந்துள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்துமரியாதை செலுத்தி, கட்சிக் கொடியேற்றி இனிப்பு வழங்குவார்கள்.

அதைத் தொடர்ந்து ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ நாளிதழ் சார்பில் தயார் செய்யப்பட்டுள்ள ஜெயலலிதா பிறந்த நாள் விழா சிறப்பு மலரை வெளியிடுவார்கள்.

ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, கட்சியில் பல்வேறு நிலைகளில் செயல்பட்டு வரும் நிர்வாகிகள் அனைவரும் அவரவர் பகுதிகளில் கண் தானம், ரத்த தானம்,மருத்துவ முகாம், கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, விளையாட்டுப் போட்டி, மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குதல், ஏழை, எளியோருக்கு அன்னதானம், இலவச திருமணங்கள் நடத்துவது, ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்களில் வசிப்போருக்கு உணவுவழங்குதல் உள்ளிட்ட நலத்திட்டஉதவிகளைச் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 mins ago

இந்தியா

16 mins ago

இந்தியா

29 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

க்ரைம்

10 hours ago

உலகம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

வேலை வாய்ப்பு

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்