இலங்கை டெஸ்ட் தொடரை வென்றது இங்கிலாந்து அணி

By செய்திப்பிரிவு

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியது இங்கிலாந்து அணி.

காலே நகரில் நடந்த இந்தடெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 381 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஏஞ்சலோ மேத்யூஸ் 110 ரன்கள் விளாசினார். இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 6 விக்கெட்கள் வீழ்த்தினார். தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தில் 116.1 ஓவர்களில் 344 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கேப்டன் ஜோ ரூட் 186, ஜோஸ் பட்லர் 55 ரன்கள்எடுத்தனர். இலங்கையின் லசித் எம்புல்தெனியா 7 விக்கெட்கள் வீழ்த்தினார்.

37 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி 126 ரன்களுக்குச் சுருண்டது. 164 ரன்கள் இலக்குடன் தொடர்ந்து பேட் செய்தஇங்கிலாந்து அணியில் ஜாக் கிராவ்லி 13, பேர்ஸ்டோவ் 29, ஜோ ரூட் 11, டேன் லாரன்ஸ் 2ரன்களில் ஆட்டமிழந்தனர். இதன்பின்னர் சிப்லி, பட்லர் ஜோடி சிறப்பாக விளையாட இங்கிலாந்து அணி 43.3 ஓவர்களில் 4 விக்கெட்இழப்புக்கு 164 ரன்கள் எடுத்து 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிப்லி 56, பட்லர் 46 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் இலங்கைக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்து அணி 2-0 என முழுமையாக கைப்பற்றி கோப்பையை வென்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

க்ரைம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

வணிகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்