‘கொசஸ்தலை ஆற்றில் குளிக்க கூடாது’

By செய்திப்பிரிவு

நீர்நிலைகளுக்கு அருகில் சிறுவர்களை விளையாட அனுமதிக்கக் கூடாது என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போது பெய்த மழையின் காரணமாக கொசஸ்தலை ஆறு, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகம் உள்ளது. ஆகவே, கொசஸ்தலை ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளின் கரையோர பகுதிகளில் வசிப்பவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் நீர் நிலைகளுக்கு அருகில் செல்லவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது.

அதுமட்டுமல்லாமல், நீர் நிலைகளுக்கு அருகில் சிறுவர்களை விளையாட அனுமதிக்கக் கூடாது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

க்ரைம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

சினிமா

7 hours ago

கல்வி

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

சினிமா

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்