மெரினா கடற்கரையில் நண்பர்களுடன் ஜாலியாக கடலில் குளித்த கல்லூரி மாணவர் கடலலையில் சிக்கி பலியானார். அவரது உடல் இன்று கரை ஒதுங்கியது.
ஆந்திராவைச் சேர்ந்தவர் சரவணக்குமார் (17). சென்னை, நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். நேற்று விடுமுறை நாள் என்பதால் கல்லூரி நண்பர்களுடன் மெரினா கடற்கரைக்கு வந்துள்ளார்.
பின்னர் நண்பர்களுடன் கடலில் இறங்கி குளித்துள்ளார். அது தடை செய்யப்பட்ட இடமாகும். அப்போது திடீரென வந்த ராட்சத அலையில் சிக்கி சரவணகுமார் கடலில் மூழ்கினார். அவரை மீட்க நண்பர்கள் போராடியும் கடலலை அவரை இழுத்துச்சென்றது. இது பற்றி அண்ணா சதுக்கம் போலீஸில் மாணவர்கள் புகார் அளித்ததன் பேரில் போலீஸார் மீனவர்கள் மூலம் சரவணக்குமார் உடலை தேடினர்.
இந்நிலையில் அவரது உடல் இன்று ஒதுங்கியது. அவரது உடலை கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்காக கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 mins ago
வேலை வாய்ப்பு
11 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
கல்வி
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
வாழ்வியல்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago