ஏழைகளுக்கும் தரமான கல்வி வழங்க வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் நேற்று பேரணி நடத்தப்பட்டது.
‘ரவுத்திரம் பழகு’ என்ற தலைப்பில், மகாகவி பாரதியார் மக்கள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட இந்த பேரணியை கட்சியின் தலைவர் வழக்கறிஞர் மயிலை எஸ். சத்யா தொடங்கி வைத்தார். பெசன்ட் நகரில் உள்ள எலியட்ஸ் கடற்கரை அருகே தொடங்கிய 3 கி.மீ. பேரணி, மீண்டும் அதே இடத்தில் நிறைவுற்றது.
இந்த பேரணியில் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த பேரணியில் கலந்து கொண்டவர்கள் ஏழைகளுக்கும் தரமான கல்வி வழங்க வேண்டும், சாதி மத பேதம் ஒழிய வேண்டும் என்பன போன்ற வாசகங்களை கையில் ஏந்தியப்படி, கோஷங்களை எழுப்பினர்.
இது குறித்து மயிலை எஸ்.சத்யா கூறியது: ஏழைகளுக்கும் தரமான கல்வி வழங்க வேண்டும். அதனை வலியுறுத்தியே பேரணி நடத்தப்பட்டது. தொடர்ந்து இது போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கோரிக்கைகளை வலியுறுத்தவும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
இந்தியா
6 hours ago
விளையாட்டு
8 hours ago
க்ரைம்
8 hours ago
உலகம்
9 hours ago
விளையாட்டு
10 hours ago
வேலை வாய்ப்பு
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
விளையாட்டு
11 hours ago
கல்வி
11 hours ago