ஐஸ்ஹவுஸ் காவல் நிலையம் அருகே ரியஸ் எஸ்டேட் அதிபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
ராயப்பேட்டை, யானை குளம் 6வது தெருவைச் சேர்ந்தவர் ஹனிப் முகமது (49). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். இவர் நேற்று மதியம் 3 மணிக்கு ஐஸ்ஹவுஸ் காவல் நிலையம் அருகே உள்ள மருத்துவமனை அருகே பைக்கில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது, அங்கு ஏற்கனவே தயாராக காத்திருந்த இளைஞர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஹனிப் முகமதுவை வழி மறித்து வயிற்றில் குத்தினார். இதில், நிலை குலைந்த ஹனிப் கீழே சரிந்து விழுந்தார். தாக்குதல் நடத் திய இளைஞர் தப்பி ஓடி விட்டார்.
இதுகுறித்து ஐஸ்ஹவுஸ் போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் சம்பவ இடம் விரைந்து ஹனிப் முகமதுவை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் வழியிலேயே உயிர் இழந்தார்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ‘‘கொலை செய்யப்பட்ட ஹனிப் முகமதுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சித்திக் (25) என்பவருக்கும் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன் விரோதம் இருந்துள்ளது. எனவே, அவர்தான் கொலை செய்தாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகி றோம். விரைவில் குற் றவாளியை கைது செய் வோம்” என்றனர்.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
16 mins ago
சினிமா
28 mins ago
சினிமா
4 hours ago
தமிழகம்
4 hours ago
சினிமா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago