புத்தாண்டு கொண்டாட்டம் | சென்னை கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை

By செய்திப்பிரிவு

சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி டிசம்பர் 31ம் தேதி இரவு 8 மணிக்கு மேல் கடற்கரைகளில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலில், "2023ம் ஆண்டு
புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பை கருதி டிசம்பர் 31ம் தேதி இரவு 8 மணிக்கு மேல் சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட மெரினா, சாந்தோம், பெசண்ட் நகர், எலியட்ஸ், நீலாங்கரை, பாலவாக்கம், காசிமேடு, திருவொற்றியூர் ஆகிய அனைத்து கடற்கரை மணற்பகுதி, கடற்கரை ஓரங்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

எனவே பொதுமக்கள் டிசம்பர் 31ம் தேதி இரவு 8 மணிக்கு மேல் கடற்கரை மணற்பகுதிக்கு வரவேண்டாம் என்றும் பொதுமக்களின் பாதுகாப்பை கருதி மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைப்பு நல்குமாறு சென்னை பெருநகர காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

இந்தியா

47 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

23 mins ago

தமிழகம்

1 hour ago

உலகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வலைஞர் பக்கம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

வாழ்வியல்

4 hours ago

மேலும்