சென்னை: கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் பள்ளி மாணவிக்கு சக மாணவன் மஞ்சள் கயிற்றை கட்டிய விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணையை சிறார் நீதிக் குழுமத்துக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் பள்ளி மாணவிக்கு, சக மாணவன் மஞ்சள் கயிறு கட்டிய விவகாரம் தொடர்பான வழக்கு, நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாணவன் கைதுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், போக்சோ மற்றும் சிறார் குற்றங்களை காவல்துறை கையாள்வது குறித்து புதிய விதிகளை வகுக்க ஆலோசனைகளை வழங்கினர்.
மேலும், மாணிவிக்கு மஞ்சள் கயிறு கட்டியது தொடர்பாக காவல் துறை பதிவு செய்த வழக்கின் விசாரணையை கடலூர் சிறார் நீதிக் குழுமத்துக்கு மாற்றி உத்தரவிட்ட நீதிபதிகள், போக்சோ மற்றும் சிறார் குற்றங்களை காவல்துறை கையாள்வது குறித்தும், அவ்வப்போது உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டியுள்ளதால், இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு அமர்வு அமைக்கவும் தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தனர். அந்த சிறப்பு அமர்வில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இடம்பெற வேண்டும் என்று நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
1 min ago
தமிழகம்
25 mins ago
இந்தியா
31 mins ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
53 mins ago
சினிமா
1 hour ago
விளையாட்டு
1 hour ago
வணிகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
1 hour ago
ஓடிடி களம்
2 hours ago
கல்வி
2 hours ago