சென்னை: தமிழகத்தில் காலாண்டுத் தேர்வு விடுமுறையை நீட்டித்து பள்ளிக் கல்வி துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் செப்டம்பர் இறுதிக்குள் காலாண்டுத் தேர்வை நடத்தி முடிக்க பள்ளிக் கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, இந்த ஆண்டு பள்ளி அளவில் வினாத்தாள் தயாரித்து காலாண்டுத் தேர்வை நடத்திக்கொள்ளலாம் என்றும், தேர்வு தேதிகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களே முடிவு செய்துகொள்ளவும் கல்வித் துறை உத்தரவிட்டு இருந்தது.
இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு விடுமுறை தேதியை கடந்த வாரம் பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது. இதன்படி 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்.1 முதல் அக்.5-ம் தேதி வரையும், 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்.1 முதல் அக்.9-ம் தேதி வரையும் விடுமுறை விடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
எண்ணும் எழுத்தும் திட்ட வளரறி மதிப்பீட்டுத் தேர்வுக்காக 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கூடுதல் விடுமுறை விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான விடுமுறை அக்.13-ம் தேதி வரையும், 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்.9 வரை விடுமுறை நீட்டித்து தமிழக பள்ளிக் கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 mins ago
தமிழகம்
11 mins ago
தமிழகம்
21 mins ago
கருத்துப் பேழை
42 mins ago
தமிழகம்
40 mins ago
இந்தியா
59 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
க்ரைம்
1 hour ago