வைகை அணையிலிருந்து கூடுதல் நீர்: கரையோர மக்களுக்கு மதுரை ஆட்சியர் எச்சரிக்கை

By எஸ்.ஸ்ரீனிவாசகன்

மதுரை: வைகை அணையில் இருந்து வினாடிக்கு 15 ஆயிரம் கன அடிநீர் திறக்கப்பட உள்ளதால் கரையோர மக்களுக்க ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.அனீஷ் சேகர்,இ.ஆ.ப., வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: ''வைகை அணையில் இருந்து வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி அளவு தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.வைகை கரையோரம் உள்ள பொதுமக்கள் கூடுதல் கவனத்துடனும், பாதுகாப்பாகவும் இருந்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.பொதுமக்கள் வைகை ஆற்றில் இறங்குவதை முற்றிலும் தவிர்த்திடவும், ஆடு மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் வைகை ஆற்றில் இறங்காமல் பாதுகாத்திடவும் அறிவுறுத்தப்படுகிறது.'' இவ்வாறு ஆட்சியர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

3 mins ago

இந்தியா

11 mins ago

இந்தியா

20 mins ago

உலகம்

31 mins ago

இந்தியா

40 mins ago

இந்தியா

34 mins ago

இந்தியா

57 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்