மேதகு வேண்டாம்; மாண்புமிகு என்றே பயன்படுத்தலாம்: ஆளுநர் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

ஆளுநரை இனி மரியாதையுடன் அழைக்க மேதகு ஆளுநர் என்ற வார்த்தையை இனி பயன்படுத்த வேண்டாம். மாண்புமிகு ஆளுநர் என்ற வார்த்தையையே பயன்படுத்த வேண்டும் என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''அரசு விழாக்கள் மற்றும் கடிதப் பரிமாற்றங்களில் ஆளுநரை மரியாதையுடன் அழைக்க பயன்படுத்தப்பட்டு வரும் மேதகு ஆளுநர் என்ற வார்த்தையை இனி பயன்படுத்த வேண்டாம்.

அதற்குப் பதிலாக, மாண்புமிகு ஆளுநர் என்ற வார்த்தையை அடைமொழியாக பயன்படுத்தும்படி, ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிவுறுத்தியுள்ளார்.

அதே நேரத்தில், அயல்நாட்டு பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது, மேதகு என்ற அடைமொழி தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

கல்வி

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

5 hours ago

க்ரைம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

சினிமா

10 hours ago

கல்வி

11 hours ago

மேலும்