தேமுதிக தொண்டர் தற்கொலை செய்து கொண்டதற்கு அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''கடலூர் மாவட்டம் அண்ணாகிராமம் ஒன்றியம் கொங்கராயனூர் கிளைக்கழக செயலாளர் சுப்பிரமணி தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். தற்கொலை என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. தேமுதிகவின் தொண்டர்கள் யாராக இருந்தாலும் வாழ்க்கையில் போராடி வெற்றி பெற வேண்டும் என்ற தன்னம்பிக்கையோடும், தைரியத்தோடும் இருக்க வேண்டும். அரசியலில் வெற்றி தோல்வி சகஜம்.
இதற்கு தற்கொலை ஒரு தீர்வாகாது. இதுபோன்ற தற்கொலை முடிவுகளால் சம்பந்தப்பட்டவர்களின் மனைவி குழந்தைகள் எப்படிப்பட்ட பாதிப்புகளை அடைவார்கள் என்பதை சிந்தித்து பார்த்தால் நிச்சயமாக இதுபோன்ற செயல்களில் எவரும் ஈடுபடமாட்டார்கள். சுப்பிரமணியின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். இதுபோன்ற தற்கொலை முயற்சியில் யாரும் எந்தக் காலத்திலும் ஈடுபட வேண்டாம்'' என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
22 mins ago
க்ரைம்
26 mins ago
சுற்றுச்சூழல்
1 hour ago
க்ரைம்
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
2 hours ago
கருத்துப் பேழை
2 hours ago
சுற்றுலா
2 hours ago
சினிமா
2 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago