விஜயகாந்த் நன்மை செய்வார்: டி.கே.ரங்கராஜன் உறுதி

By செய்திப்பிரிவு

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மக்களுக்கு நன்மை செய்வார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் கூறினார்.

சேலம் இடைப்பாடி தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட் பாளர் தங்கவேலுவை ஆதரித்து பிரச் சாரத்தில் ஈடுபட சேலம் வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் செயல்படுத்த வேண் டிய திட்டங்கள் அனைத்திலும் திரா விட கட்சிகள் இரண்டும் தோல்வி அடைந்த காரணத்தால், மக்கள் அரசி யல் மாற்றம் வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். இவ்விரு கட்சிகளும் வேலைவாய்ப்பை பெருக்கும் திட்டங்களை செயல்படுத்தவில்லை.

அதிமுக, திமுக ஆட்சியில் தமிழகம் பின்தங்கியுள்ளது. இவ்விரு கட்சிகளும் ஊழலின் எல்லா மட்டத்திலும் உள்ளன. அதிமுக அரசு சட்டப்பேரவை ஜனநாயகத்தை மதிக்கவில்லை.

மோடி தலைமையிலான மத்திய அரசு தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அதிமுக மீது தேர்தல் நேரத்தில் ஊழல் குற்றம்சாட்டும் பாஜக, அக்கட்சியை சேர்ந்த தம்பிதுரையை துணை சபாநாயகராக நியமித்தது ஏன்?

ஊடகங்கள் விஜயகாந்த்தை தவறாக சித்தரித்து வருகின்றன. படிக்காத மேதை காமராஜர் முதல்வராகி என்ன செய்யப்போகிறார் என்று அனைத்து தரப்பினரும் கேள்வி எழுப்பினர். ஆனால், அவர் முதல்வராகி பல்வேறு சாதனைகள் புரிந்தார். தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும் முதல்வராகி மக்களுக்கு நன்மை செய்வார்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்