தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக பணம் கொடுத்திருக்கிறார்கள் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குற்றம்சாட்டினார்.
தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தவிர 232 தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று காலை ஈரோட்டில் வாக்களித்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பணப்புழக்கம் அதிகமாக இருந்த காரணத்தால் 2 தொகுதியில் தேர்தலை ஒத்திவைத்திருக்கிறார்கள்.
அதிமுக பொறுத்தவரையில் எல்லா தொகுதிகளிலும் பணத்தைக் கொடுத்திருக்கிறார்கள். இதை தேர்தல் கமிஷன் சாதாரணமாக எடுத்துக் கொள்ள கூடாது. பணம் கொடுத்தது நிரூபணமால், வெற்றி பெற்றாலும் அவர்களை தோல்வியுற்றவர்களாக அறிவிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
விளையாட்டு
38 mins ago
க்ரைம்
42 mins ago
சுற்றுச்சூழல்
1 hour ago
க்ரைம்
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
2 hours ago
கருத்துப் பேழை
2 hours ago
சுற்றுலா
2 hours ago
சினிமா
3 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
3 hours ago