தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 லட்சத்து 72 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ள எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவு இன்று (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது.
எஸ்எஸ்எல்சி தேர்வு மார்ச் 15-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 13-ம் தேதி நிறைவடைந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12,054 பள்ளிகளைச் சேர்ந்த 10 லட்சத்து 72 ஆயிரத்து 223 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். பள்ளி மாணவ, மாணவிகளைத் தவிர 48,573 தனித்தேர்வர்களும் தேர்வு எழுதினர் இந்த நிலை யில், தேர்வு முடிவுகள் இன்று (புதன்கிழமை) காலை 9.31 மணிக்கு சென்னை டிபிஐ வளாகத் தில் உள்ள அரசு தேர்வுத்துறை இயக்குநர் அலுவலகத்தில் வெளியிடப்படுகின்றன. தேர்வு முடிவுகள், ஒட்டுமொத்த மற்றும் பாடவாரியான ரேங்க் பட்டியல்களை அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெளியிடுகிறார். தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டதும் மாணவர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை பின்வரும் இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.
www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
27 mins ago
க்ரைம்
31 mins ago
இந்தியா
29 mins ago
சினிமா
1 hour ago
கருத்துப் பேழை
1 hour ago
சுற்றுலா
2 hours ago
சினிமா
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
ஓடிடி களம்
1 hour ago
தமிழகம்
3 hours ago