சென்னை: 5-ஜி தொழில்நுட்ப மேம்பாடு தொடர்பாக சென்னை ஐஐடி-ல் ஆராய்ச்சி நடைபெற உள்ளது.
தொலைத்தொடர்புத் துறையில் 5-ஜி தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது தொடர்பாக சென்னை ஐஐடி-யுடன் இணைந்து செயல்பட எல் அண்ட் டி இன்போடெக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதன்மூலம் இரு நிறுவனங்களும் 5-ஜி தொழில்நுட்பத்தில் புதுமைகளையும், கிராமப்புறங்களில் குறைந்த செலவில், குறைந்த அலைவரிசையில் மேம்படுத்தப்பட்ட 5-ஜி நெட்வொர்க் வசதிகளையும் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளன.
இது தொடர்பாக சென்னை ஐஐடி டீன் மகேஷ் பஞ்சாக்னுல்லா கூறும்போது, ``சென்னை ஐஐடி-ன் 5-ஜி ஆராய்ச்சி மேம்பாட்டுத் திட்டம், இந்தியாவில் 5-ஜி தொழில்நுட்பத்தில் முன்னணியில் திகழும் நிறுவனங்களை ஊக்குவிக்கும் முயற்சியாகும். செயல்முறை 5-ஜி தொழில்நுட்பத்துக்கு இணையான ஆராய்ச்சியை மேற்கொள்வதே இந்த கூட்டுமுயற்சியின் நோக்கம்'' என்றார்.
சென்னை ஐஐடி எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் துறை உதவிப் பேராசிரியரும், சிஎஸ்ஆர் திட்ட முதன்மை ஆய்வாளருமான ராதாகிருஷ்ண காந்தி கூறும்போது, ``இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டுள்ள இடைவெளியைக் குறைக்கும் பாலமாக 5-ஜி தொழில்நுட்பம் திகழும். இந்த துறையில் மாணவ, மாணவிகளுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன'' என்றார்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
இந்தியா
6 hours ago
விளையாட்டு
8 hours ago
க்ரைம்
9 hours ago
உலகம்
10 hours ago
விளையாட்டு
10 hours ago
வேலை வாய்ப்பு
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
விளையாட்டு
11 hours ago
கல்வி
11 hours ago