ஜெயலலிதா ஆணையிட்டால் சட்டப் பேரவைத் தேர்தலில் பிரச்சாரத்துக்கு தயார் என மதுரை ஆதீனம் அரு ணகிரிநாதர் தெரிவித்தார்.
கடந்த மக்களவைத் தேர் தலில் அதிமுகவுக்கு ஆதர வாக மதுரை ஆதீனம் 40 தொகு திகளுக்கும் சென்று பிரச் சாரப் பொதுக்கூட்டங்களில் பேசினார். சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயலலிதா அழைத்தால் பிரச்சாரம் செய்வேன் என தெரிவித்தார். ஆனால், அதிமுக தலைமை மதுரை ஆதீனத்தை கண்டுகொள்ளவே இல்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு நேற்று கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் மதுரை ஆதீனத்தை அவரது மடத்தில் சென்று சந்தித்து, அவரிடம் அமைச்சர் ஆசி பெற்றார். அமைச்சர் செல்லூர் கே.ராஜு விடம் ஆதீனம் சந்திப்பு குறித்து கருத்து கேட்டபோது, இப்போதுள்ள சூழலில் தான் எதுவும் பேச முடியாது என மறுத்துவிட்டார்.
மதுரை ஆதீனத்திடம் கேட்டபோது, ‘சட்டப்பே ரவைத் தேர்தலையொட்டி அமைச்சர் தன்னிடம் ஆசி பெற வந்தார். தேர்தலில் அதி முகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய ஆவலாக இருக்கிறேன். அதிமுக தலைமைக்கழகம் அழைத்தால் பிரச்சாரத்துக்கு புறப்படத் தயார்’ என்றார்.
ஆதீனத்தின் இந்த பதிலில் இருந்து அமைச்சர் சந்திக்கும் முன்பு வரை அதிமுக தலைமை அவரை பிரச்சாரத்துக்கு அழைக்கவில்லை என்பது தெரிகிறது. தற்போது அமைச்சர் சந்திப்புக்குப்பின் அதி முகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய ஆதீனம் விருப்பத்தை தெரிவித்தது, பிரச்சாரம் செய்ய அமைச்சர் மூலம் அழைப்பு வந்திருப்பதையே காட்டுவதாகத் தெரிகிறது.
முக்கிய செய்திகள்
கல்வி
42 mins ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
இந்தியா
3 hours ago
க்ரைம்
6 hours ago
விளையாட்டு
7 hours ago
இந்தியா
7 hours ago
விளையாட்டு
9 hours ago
தமிழகம்
9 hours ago
சினிமா
9 hours ago
கல்வி
9 hours ago
தமிழகம்
9 hours ago