சமயபுரத்தில் தனியார் பள்ளி மாணவர்கள் 7 பேருக்கு கரோனா

By ஜெ.ஞானசேகர்

திருச்சி: சமயபுரத்தில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் 7 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, பள்ளியில் உள்ள பிற மாணவர்களுக்கு இன்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

திருச்சி சமயபுரத்தில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவர்களில் விடுதி மாணவர்கள் 5 பேர் உட்பட 7 பேருக்கு கடந்த வாரம் காய்ச்சல், சளித் தொல்லை இருந்தது.

இதையடுத்து, 7 பேரும் பள்ளிக்கு வராமல் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளவும், கரோனா பரிசோதனை செய்துகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டனர். இந்த நிலையில், அவர்கள் 7 பேருக்கும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, பள்ளிக்கு டிச.25-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டதுடன், பள்ளியில் உள்ள பிற மாணவ- மாணவிகள் 600 பேருக்கு மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் இன்று பள்ளி வளாகத்திலேயே கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதேபோல், சீராத்தோப்பு அரசு மேல்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு பயிலும் மாணவிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அந்த மாணவி பயிலும் வகுப்புக்கு மட்டும் டிச.23-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

கருத்துப் பேழை

30 mins ago

விளையாட்டு

34 mins ago

இந்தியா

38 mins ago

உலகம்

45 mins ago

சினிமா

1 hour ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்